Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

பிறப்பு
-5 % Out Of Stock
'பிறப்பு’ யு.ஆர். அனந்தமூர்த்தியின் நான்காவது நாவல். அவருடைய ‘சமஸ்காரா’வுக்குப் பிறகு கன்னட இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படைப்பு இது. இந்நாவல் இதிகாசத் தன்மை கொண்டதென பிரபல விமர்சகர் டி.ஆர். நாகராஜ் குறிப்பிட்டுள்ளார். மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தைத..
₹95 ₹100
பிறப்பொக்கும்
-5 %
மனிதர்களின் பார்வையிலிருந்து சிறுதெய்வங்களைத் தரிசனம் செய்யும் கலைப்பார்வையைத் திசை திருப்புகிறது இந்நாவல். கிராமிய மணத்தில் உயிர்த்திருக்கும் அச்சிறுதெய்வத்தின் பார்வையில் மானுட தரிசனம் நிகழும் கணங்கள் இப்படைப்பின் வழியாக நம்மைச் சேர்கின்றன. நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டியது, மதிப்பில்லா வாழ்க்க..
₹261 ₹275
பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்
-5 %
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந. ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதையின் பொதுப் பாதையிலிருந்து விலகித் தனி வழியே நடப்பவர். அவரது கவிதைகளும் பிரத்தியேகமானவையாகத் தனித்து நிற்பவை. தோற்றத்தில் எளிமையாகத் தென்படும் கவிதைகள் ஆழத்தில் பல படிநிலைகள் கொண்டவை. தொன்மமும் புராணமும் ..
₹95 ₹100
பிள்ளை கடத்தல்காரன்
-5 %
பிள்ளை கடத்தல்காரன்20 தலைப்புகளில் சிறுகதை செல்கிறது இந்தியா இலங்கை கனடா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்ற உண்மை சம்பவங்களாக பல்வேறு தளங்களில் செல்கிறது சில கதைகள் புதியவைகளை கற்றுத்தருகிறது என்றே சொல்லலாம் ..
₹228 ₹240
பிள்ளை கெடுத்தாள் விளை
-4 %
‘காலச்சுவடு’ பிப்ரவரி 2005 இதழில் பிரசுரமான சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதைமீது இலக்கிய வாசிப்பின் எல்லையை மீறிய குறுகிய அரசியல் வாசிப்பின் விளைவாக அவதூறுகள் வீசப்பட்டன. அதனை எதிர்கொள்ளும் வகையில் இலக்கியம் எது, ஓர் இலக்கியப் பிரதியை எவ்வாறு வாசிப்பது என்பன பற்றிய வரையறைகளை முன்..
₹48 ₹50
பிள்ளை விளையாட்டு
-5 %
பல தளங்களில் இயங்குகிறது குவளைக் கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக் கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல் பான கணங் களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. ..
₹38 ₹40
பீமாயணம்: தீண்டாமையின் அனுபவங்கள்
-5 %
இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 - 1956), ‘தீண்டத் தகாதவராக’ வளர்வது மற்றும் தொடர்ந்து பாரபட்சத்திற்கு ஆளாவது ஆகிய அனுபவங்களைப் பதிவு ..
₹333 ₹350
புகை நடுவில்
-5 %
பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’. வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது...
₹309 ₹325
புஞ்சைலெ ஒரு நடிகெ இருந்தா
-5 %
தஞ்சை மண்டலத்துக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் வரைபடத்தின் வழியே நுண்ணிய மானுடச் சித்திரங்கள் அவற்றின் அசல்தன்மையோடு இந்தக் கதைகளில் பதிவாகியிருக்கின்றன. நனவிலி மனத்தின் கடிவாளங்களை மீறும் நினைவோட்டங்களை மையமாகக் கொண்ட இச்சித்திரங்கள், சிறுகதை நெறிகளை அசட்டையாகக் கையாண்டிருக்கும் அதே வேளையில் செய்..
₹228 ₹240
புதிய அறையின் சித்திரம்
-5 %
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்களையும் அன்றாடத் தகவல்களையும் பிம்பங்களின் ஓசைகளாகப் பதிவுசெய்திருக்கும் இந்தக் கவிதைகள் நவீனப் படைப்பாற்றலின் புதிய சித்திரங்களைத் தீட்டுகின்றன...
₹71 ₹75
புதிய சலனங்கள்
-5 % Out Of Stock
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி..
₹71 ₹75
புதுமைப்பித்தனுக்குத் தடை
-5 % Out Of Stock
நவீனத் தமிழின் முன்னோடி எழுத்துக் கலைஞரான புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்', 'துன்பக்கேணி' ஆகிய இரு கதைகளை சென்னைப் பல்கலைக் கழகம் 2014இல் தனது பாடத் திட்டத்திலிருந்து நீக்கியது. துன்பக்கேணி தலித்துகளை அவமதிப்பதாகவும் அக்கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்..
₹95 ₹100
Showing 1021 to 1032 of 1345 (113 Pages)